×

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் ஜன.1ல் 1008 அகல்விளக்கு ஏற்றம்

பாவூர்சத்திரம்,டிச.30: கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை கடந்த 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலை 6 மணிக்கு ராமநாம பஜனையுடன் கோயில் வெளிபிரகாரத்தில் (தெப்பக்குளம்) வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக வருகிற ஜன.1ம்தேதி மாலை 5.45 மணிக்கு கோயிலின் வெளிபிரகாரத்தில் (தெப்பக்குளத்தை சுற்றிலும்) 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் வலம் வருகிறார். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

The post கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் ஜன.1ல் 1008 அகல்விளக்கு ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : Agalvilakku ,Geezappavur Narasimha Temple ,Margazhi ,Keezapavoor Narasimha Perumal temple ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் வருடாபிஷேகம்